Jan 19, 2013


பொங்கலோ பொங்கலோ 

உன் உழவனுகாக நீ 
மறித்து வைத்தாய் என் தாயை  ..
மறந்து விடாதே 
நானும் உந்தன் இனமடா (உழவன்) ..
தை பொறந்தாச்சு 
மனசு நிறைய வில்லை ...
பொன்னி தாய்  நீ மரித்தால்  
என்ன ...
எங்கள் மகிழ்ச்சி 
கடல் வற்றாதது டா ...
உலகுக்கு சோறுடைத்த 
சோழ நாடு ..
சோகத்தில் முழுகி 
கிடக்கு  ஈழத்தில் 
செத்து  கிடக்கு ..
மண் வாசனை 
மணக்கும் என் 
நிலத்தில் 
நின்று கொண்டு 
கடைசி கண்ணீர் துளியோடு 
இறைக்கு  வைக்கிறேன் 
சூரிய பொங்கல் 
கை விடுவாயோ  மழை கொடுப்பாயோ 
உந்தன் பாடு !!!
உலகின் கடைசி 
மறவர் குடி நாங்கள் 
எங்கள் நிலம் 
காய்ந்தாலும் 
நெஞ்சம் காயாது 
ஈரம் குறையாது 
வசந்த கால கனவோடு 
கொண்டாடுகிறோம் 
பொங்கலோ பொங்கல் 

அருண் 

Sep 28, 2012


Love

ஆதிமனிதனோடு
வாழ்ந்த
முதல்
மொழி!

உலகிற்கு
நெல் அளந்த
பொன்னியின் கரையில்
வளர்ந்த
பொன் மொழி!


திருவள்ளுவனின்
உலக பொதுமுறைக்கு
பெருமை சேர்த்த
திருமொழி !

ஐம்பெரும்
காப்பியங்கள் அணிகலனாய்
கொண்ட
பேதை மொழி!

ஒவ்வை
தொகுத்த
அற மொழி!

பெண்ணை
சக்தியின் வடிவமாய்
படைத்த
பாரதி மொழி!

வயல் காட்டை
இசையோட இணைத்த
தாலாட்டு மொழி

பழனி ஆண்டவன்
பேசிய
"காதல்மொழி"

அன்னையாக
போற்ற படும்
"அன்புமொழி "

என்றும் செம்மொழி
எந்தன் தாய்மொழி!
தமிழ்மொழி!

தமிழ் வாழ நாம் வாழ்வோம் !!
தமிழ் வளர நாம் வளர்வோம் !!




அருண்




இன்று புதிதாய்ப் பிறந்தேன் ஆயினும்
என்னை இழக்கின்றேன்! 
உன் கன்னத்துடன்- நீ 
என்னை உரசும் 
பொழுது.. 

இன்னும்
சாய்ந்து விழுகின்றேன்!
உன் இதயஓசை உணர ..

ஆயினும்
இன்னும் அழுகின்றேன்..
நம் இரு இதழ்களின்
துரத்தை குறைக்க ..

என்னை சிரிக்க
வைக்க நீ - குழந்தை ஆகிறாய்
உன் சிரிப்பிற்காக
நான் சிரிக்கிறேன்..

இப்படிக்கு
இன்று புதிதாய்ப் பிறந்து
உன் கன்னத்தோடு
உறவாடும்
நான் :)

காதல் சுவடுகள்
----------------------------
உன்னை
புகை படம் எடுக்கும்
பொது
தெரியவில்லை
உனக்கும் எனக்குமான உறவை ..

சில பெண்கள்
என் நிறத்தை
பார்த்தார்கள் ...

சில பதுமைகளோ
என் கடுமையை
வெறுத்தார்கள் ..

சில கன்னிகைகள்
என்னை மிதித்து
விட்டு சென்றார்கள் ..

சிலர்
இவன் எதற்கும்
உதவமாட்டான்
என்றார்கள் ..

அவள் மட்டுமே
என்னுள் இருக்கும்
ஈரத்தை பார்த்தால் ...
பார்க்கிறாள்

இன்று என்னுள்ளே
வேருன்றி விட்டால்
உன் மேலே இருக்கும்
செடியை போல் ..

-அருண்
வெண்
நிலவில் 
தன் "கால்களை" 
வைத்த
கல் நெஞ்சகாரன்!!!


"Neil ArmStrong"ஐ

விட

என்
நிலவின்
இதயத்தில்
இருக்கும் நான்
சிறந்தவன் :) 

-
அருண்