Sep 19, 2011

காதல் சுவடுகள் !!

திருச்சியில்
ஒரு
மழை காலம் ..

என்றும்
இல்லாத
மௌனத்துடன்
எங்கள் பயணம்,

எப்போ
நம் கல்யாணம் ?
ஒற்றை வரியில் முடித்தால் .....

இப்போ அதானே
நடந்து கொண்டு
இருக்கிறது ... என்றேன்
புரியாமல் !! அவள் என்னை
பார்க்க...

புன்னைகையுடன்
நான் மேலே
பார்த்தேன் ..

அட்சதை தூறலாய்
மழை ............

மேலே சாயிந்தால்
புரிந்தவளாக ..

மழை விட்டது
கதிரவன் தெரிந்தான் ..

அவள் முகத்தில்
புன்னகையும் தான் ..
-
அருண்

Sep 3, 2011

காதல் சுவடுகள்

காதல் ஒரு
புதிர்- அதில் விழாதவனுக்கு..
காதல் ஒரு
அவஸ்தை - அதில் சிக்கியவனுக்கு..
காதல் ஒரு
வலி - அதில் தோற்றவனுக்கு..

இவர்களுக்கு
சில விதிகள்
புரிவதில்லை ...

கருவறை அவஸ்தையை
பொறுத்தவனே
உலகை காண்கிறான் ..

மரண வலியை
பொறுத்தவனே
சொர்கத்தை அடைகிறான் ..

காதல் புதிரா
என்று ஆராய்வதை விட ..
அதன் புனிதத்தை
நேசித்தால்

நீயும் உணர்வாய்
காதல் சொர்கம்தான் என்று !!!

அருண்