Sep 19, 2011

காதல் சுவடுகள் !!

திருச்சியில்
ஒரு
மழை காலம் ..

என்றும்
இல்லாத
மௌனத்துடன்
எங்கள் பயணம்,

எப்போ
நம் கல்யாணம் ?
ஒற்றை வரியில் முடித்தால் .....

இப்போ அதானே
நடந்து கொண்டு
இருக்கிறது ... என்றேன்
புரியாமல் !! அவள் என்னை
பார்க்க...

புன்னைகையுடன்
நான் மேலே
பார்த்தேன் ..

அட்சதை தூறலாய்
மழை ............

மேலே சாயிந்தால்
புரிந்தவளாக ..

மழை விட்டது
கதிரவன் தெரிந்தான் ..

அவள் முகத்தில்
புன்னகையும் தான் ..
-
அருண்

No comments:

Post a Comment