Mar 21, 2011

காதல் சுவடுகள்



...........................
ஞாயிறு
பத்தரை மணிக்கு
முன்
படுக்கை விட்டு
அகலாத நான் !!

பகலவன்
பார்க்கும் முன்
எழுந்து
என் அப்பாச்சிக்கு
உயிர் கொடுத்து
பறந்தேன் ..

அவள் கோலமிடும்
விரல்களை காண ..
விடு அருகே

அவளும் வேடிக்கை
பார்த்து கொண்டு
இருந்தால்..

அவள் அம்மா
கோலமிடுவதை ..
சற்று அதிர்தேன் என்
எதிர்காலத்தை நினைத்து..

பாரதி கண்ட
புதுமை
இவளோ என்று ..
என்னுளே ஒரு எண்ணம் ...

எல்லாம் காதல்
படுத்தும் பாடு
என்று
உரைத்த பொது
உணர்தேன்

காதல் சொர்க்கம் தான் !!!!!!!!

- அருண்

No comments:

Post a Comment