Apr 1, 2011


காதல் சுவடுகள்
------------------------
உன் அமைதியான
கண்களில்
என்றும் இல்லாத
சோகம் ..

வாழ்கையே
வெறுப்பாக இருக்கிறது
அருண்.. உனக்கு?
வேலை பளுவில்
நீ உதிர்ந்த கேள்வி
இது ..


வாழ்க்கையை
நேசிக்க
கற்றுகொண்டேன்
நீயே
என் வாழ்க்கை
ஆன பின் ..

உன்னை எப்படி
நான்
வெறுப்பது ..

உனக்கும்
சொல்லி தர
ஆசை தான்
குருவுக்கு
பாடம் சொல்ல
பக்குவ படாத
காதல் கிறுக்கன்
நான் ...



- அருண்

No comments:

Post a Comment